பெருவில் இருக் குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட தகராறு – 10 பேர் படுகாயம்!

பெருவின் வடக்குப் பகுதியில், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்ட ஒரு தெருவில் ஏற்பட்ட ஒரு வெடிப்பில் 10 பேர் காயமடைந்ததாகவும், 25 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ட்ருஜில்லோ நகரில் நடந்த குறித்த குண்டு வெடிப்பில் மிரட்டி பணம் பறிப்பதில் ஈடுபட்டுள்ள குற்றக் குழுக்களுக்கு இடையிலான தகராறுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
இந்தப் பகுதியில் மின்சார சேவையையும் துண்டித்து, ஏராளமான வாகனங்களைப் பாதித்த இந்த வெடிப்பு, தென் அமெரிக்க நாட்டில் பதிவான இரண்டாவது வெடிப்பு ஆகும்.
தலைநகர் லிமாவில் உள்ள ஒரு உடற்பயிற்சி கூடத்தில் முதலாவது சம்பவம் நடந்தது, ஆனால் உடனடியாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனக் கூறப்படுகிறது.
(Visited 1 times, 1 visits today)