இந்தியா

இந்தியாவில் மருந்து ஆலையில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவம் : 15 பேர் பலி, 40 பேர் காயம்

இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள மருந்து தயாரிப்பு ஆலையில் ஏற்பட்ட வெடிப்பின் காரணமாக குறைந்தது 15 பேர் உயிரிழந்தனர் என மாவட்ட அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

40 பேர் காயமடைந்திருப்பதாகத் தெரிவித்த ஆந்திர மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் எம். தீபிகா, மரண எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்றும் அச்சம் தெரிவித்தார்.

16 ஹெக்டர் பரப்பளவு கொண்ட மருந்து தயாரிப்புப் பிரிவில் தீ மூண்டதாக மாவட்ட ஆட்சியர் விஜயகிருஷ்ணன் தெரிவித்தார்.

காயமடைந்தோர், ஆலைக்கு அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.

மதிய உணவு இடைவேளையின்போது வெடிப்பு ஏற்பட்டதாக அறியப்படுகிறது.

வெடிப்புக்கான காரணத்தைக் கண்டறிய உடனடியாகத் தீவிர விசாரணை நடத்துமாறு ஆந்திர அரசு உத்தரவிட்டுள்ளது.

(Visited 13 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே