இலங்கை செய்தி

பாராளுமன்றத்தில் கிடைத்த தலையணைகள் மற்றும் மெத்தை பற்றி விளக்கம்

நாடாளுமன்றக் குழு அறையில் இரண்டு தலையணைகள் மற்றும் மெத்தை ஒன்று காணப்பட்டதாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் முற்றிலும் பொய்யானவை என நாடாளுமன்றத்தின் பொதுச் செயலாளர் குஷானி ரோஹணதீர தெரிவித்துள்ளார்.

கடந்த ஜூலை 30ஆம் திகதி மற்றும் அதனை அண்மித்த நாட்களில் ஊடகங்களில் வெளியான செய்திகள் தொடர்பில் முதற்கட்ட விசாரணைகளை மேற்கொள்வதற்கு மூன்று சிரேஷ்ட அதிகாரிகள் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும், இது தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்ட அதிகாரி ஒருவர் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் நாடாளுமன்ற பொதுச் செயலாளர் குஷானி ரோஹணதீர தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற பணியாளர்கள் சம்பந்தப்பட்ட குழு உறுப்பினர்களுக்கு தனிப்பட்ட முறையில் அல்லது தொலைபேசி அல்லது மின்னஞ்சல் மூலம் தெரிவிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட குழு உறுப்பினர்களுக்கு மேலதிகமாக நாடாளுமன்றத்தின் பொதுச் செயலாளர் மற்றும் உதவிப் பொதுச் செயலாளர் ஆகியோருக்கும் தகவல்களை சமர்ப்பிக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!