செய்தி வட அமெரிக்கா

நியூயோர்க் மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல் – இலவசமாக கற்க வாய்ப்பு

நியூயோர்க் மருத்துவ கல்லூரியில் தற்போதைய மற்றும் வருங்கால மாணவர்கள் ரூத் கோட்ஸ்மேன் என்பவரால் வழங்கப்பட்ட ஒரு பில்லியன் டொலர் நன்கொடையின் மூலம் இலவச கல்வியைப் பெறுவார்கள்.

இது அமெரிக்காவில் இதுவரை வழங்கப்படாத மிகப்பெரிய பரிசாகும்.

நியூயோர்க் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மருத்துவக் கல்லூரி ஒரு பணக்காரரிடம் இருந்து ஒரு பில்லியன் டொலர் நன்கொடை பெற்றுள்ளது. இதனால் கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு கல்விக் கட்டணத்தை இரத்து செய்திருப்பதாக கல்லூரியின் தாய் நிறுவனமான நியூயார்க் மெடிக்கல் ஸ்கூல் தெரிவித்துள்ளது.

இந்த நன்கொடை அமெரிக்காவில் உள்ள ஒரு கல்வி நிறுவனம் பெற்றிருக்கும் மிகப்பெரிய நன்கொடைகளில் ஒன்றாகும். இதன் மூலம் கிட்டத்தட்ட 60,000 டொலர் மதிப்பிலான நிலுவையில் உள்ள வருடாந்திர கல்விக் கட்டணமும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

மருத்துவப் பாடசாலைமற்றும் அதனுடன் இணைந்த மருத்துவமனையான மான்டிஃபியோர் மருத்துவ மையம், நியூயார்க்கின் பிராங்க்ஸில் அமைந்துள்ளது.

இந்த மருத்துவமனையில் சுகாதார நடவடிக்கைகள் மிக மோசமாக இருப்பதாக அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மருத்துவக் கல்லூரி, ஐன்ஸ்டீன் அறக்கட்டளை அறங்காவலர் குழுவின் தலைவரும் மான்டிஃபியோர் ஹெல்த் சிஸ்டம் குழு உறுப்பினருமான ரூத் எல். கோட்டெஸ்மேன், எட்.டி., ஆகியோரிடமிருந்து ஒரு பரிசைப் பெற்றுள்ளது என்று திங்கள்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது வரலாற்றில் கிடைத்த மிகப்பெரிய பரிசு எனவும் நாட்டின் எந்த மருத்துவப் பாடசாலைக்கு செய்யப்பட்ட மிகப்பெரிய பரிசு எனவும் தெரிவித்துள்ளது.

அதற்கமைய, ஐன்ஸ்டீன் கல்லூரியில் உள்ள எந்த மாணவரும் மீண்டும் கல்விக் கட்டணம் செலுத்தவேண்டியதில்லை என்பதை உறுதி செய்கிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(Visited 13 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
Skip to content