ஐரோப்பா

போரிஸ் புயலால் பாதிக்கப்பட்டுள்ள ஐரோப்பா : மீட்பு நடவடிக்கையில் முனைப்பு காட்டும் அதிகாரிகள்!

ஐரோப்பா முழுவதும் போரிஸ் புயலால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 07 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 04 பேர் மாயமாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ருமேனியாவில் ஐந்து பேரும், ஆஸ்திரியா மற்றும் போலந்தில் தலா ஒருவரும் வெள்ளத்தால் உயிரிழந்துள்ளனர். செக் குடியரசில், தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட நான்கு பேரைக் காணவில்லை என்று போலீசார் தெரிவித்தனர்.

நாடு முழுவதும் சுமார் 100 இடங்களில் அதிக வெள்ள எச்சரிக்கையை அதிகாரிகள் அறிவித்ததால் செக் குடியரசின் பெரும்பாலான பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

ஓபவா நகரில், சுமார் 56,000 மக்கள்தொகையில் 10,000 பேர் வரை தங்கள் வீடுகளை விட்டு உயரமான பகுதிகளுக்கு செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

ஓபவா ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் பகுதியில் உள்ள மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்ல மீட்பு குழுவினர் படகுகளை பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.

(Visited 219 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!