ரணிலை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் – எரிக் சோல்ஹெய்ம் கோரிக்கை
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என நோர்வேயின் முன்னாள் காலநிலை மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் எரிக் சோல்ஹெய்ம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதற்காக இலங்கை, தெற்காசியா மற்றும் உலகெங்கிலும் உள்ள பல தலைவர்களுடன் தானும் இணைவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தனது ‘X’ கணக்கில் வெளியிட்டுள்ள பதிவிலேயே அவர் இவ்வாறான கோரிக்கை விடுத்துள்ளார்.

(Visited 21 times, 1 visits today)





