இலங்கை செய்தி

ருமேனியாவில் தொழில்வாய்ப்பு – ஏறக்குறைய 740 மில்லியன் மோசடி!

ருமேனியாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி  740 மில்லியனுக்கும் அதிகமாக மோசடி செய்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் ஒன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் முற்றுகையிடப்பட்டுள்ளது.

அவ் நிறுவனத்தின் இயக்குநரை மஹரகம குற்றப் புலனாய்வுத் துறை கைது செய்துள்ளது.

சந்தேக நபர் நேற்று (31) நுகேகொடை தலைமை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குற்றப் புலனாய்வுத் துறையின் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு, சம்பந்தப்பட்ட வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் தொடர்பாக 400க்கும் மேற்பட்ட முறைப்பாடுகளை பெற்றுள்ளது.

அதன்படி, நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு 1 விசாரணைகளைத் தொடங்கியுள்ளது, மேலும் இது தொடர்பாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்திற்கும் 117 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

சம்பந்தப்பட்ட நிறுவனம்  பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து 850,000 ரூபாய்  முதல் 1,850,000 ரூபாய் வரை பணம் பெற்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

(Visited 2 times, 5 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை