செய்தி விளையாட்டு

Emerging Asia Cup – அரையிறுதி போட்டியில் இந்தியாவை வீழ்த்திய ஆப்கானிஸ்தான்

வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசியக் கோப்பை 2024 (எமர்ஜிங் ஆசிய கோப்பை) டி20 கிரிக்கெட் தொடர் ஓமனில் நடைபெற்று வருகிறது.

இத்தொடரில் இன்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா – ஆப்கானிஸ்தான் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 206 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து 207 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்தியா 20 ஓவர்கள் முடீல் 7 விக்கெட்டுகளை இழந்து 186 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதன் மூலம் இந்தியாவை 20 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய ஆப்கானிஸ்தான் எமர்ஜிங் ஆசிய கோப்பை இறுதிப்போட்டிக்குள் நுழைந்து இலங்கை அணியை எதிர்கொள்ளவுள்ளது.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!