ஆசியா

மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல்… விமான நிலையங்களில் பாதுகாப்பை அதிகரித்த பிலிப்பைன்ஸ்

பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் விமானம் ஒன்றில் வெடிகுண்டு வெடிக்கும் என மின்னஞ்சல் மூலம் வந்த மிரட்டலை அடுத்து 42 விமான நிலையங்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த மின்னஞ்சலின் நம்பகத்தன்மை குறித்து விசாரிக்கவும் பிலிப்பைன்ஸ் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டின் பயணிகள் விமான போக்குவரத்து ஆணையம் வெள்ளிக்கிழமை இந்த விவகாரம் தொடர்பில் தெரிவித்துள்ளது.

நாட்டின் அனைத்து வணிக ரீதியான விமான நிலையங்களிலும் உடனடியாக மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டதாக விமான போக்குவரத்து ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் சரிபார்க்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது. மேலும், செபு, பிகோல், தாவோ மற்றும் பலவான் ஆகிய இடங்களுக்குச் செல்லும் விமானங்களில் ஒன்றில் வெடிகுண்டு வெடிக்கும் என்றே மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

(Visited 13 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்