இலங்கை செய்தி

ரயில் மற்றும் மின்சாரம் தாக்கி யானைகள் பலி

 

முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் இரண்டு காட்டு யானைகள் நேற்று (22) புகையிரதத்தில் அடிபட்டு மற்றும் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த உத்தராதேவி ரயிலில் கிளிநொச்சி முறுகண்டி பகுதியில் யானை மோதி உயிரிழந்துள்ளதாக கிளிநொச்சி வனஜீவராசிகள் அலுவலகம் தெரிவித்துள்ளது.

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பேரி சாலம்பன் பகுதியில் யானையொன்று சடலமாக மீட்கப்பட்டதாக முல்லைத்தீவு வனவிலங்கு அதிகாரி தெரிவித்தார்.

குறித்த பகுதியில் உள்ள வயல்களுக்கு யானை அச்சுறுத்தல் காரணமாக அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத மின்கம்பியில் சிக்கி இந்த யானை உயிரிழந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

உயிரிழந்த யானை 15 வயதுடைய யானை என வனவிலங்கு அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.

 

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!