இலங்கை இன்றைய முக்கிய செய்திகள் செய்தி

இலங்கையில் அடுத்த தேர்தலுக்கு தயாராகும் தேர்தல்கள் ஆணைக்குழு

இலங்கையில் அடுத்த தேர்தலுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதற்கமைய, கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நிறைவடைந்ததன் பின்னர் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டால், பரீட்சையின் போது வேட்பாளர்கள் பிரசார நடவடிக்கைகளை தொடங்குவார்கள் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இது பரீட்சைக்கு இடையூறு ஏற்படும் என்பதால் பரீட்சை முடியும் வரை தேர்தல் தொடர்பான அறிவிப்பை வெளியிட வேண்டாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது.

மோசமான வானிலை காரணமாக, பரீட்சை சில நாட்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் அந்த நடவடிக்கை இந்த வாரம் மீண்டும் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதேவேளை, உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான விசேட கட்சித் தலைவர் கூட்டம் இன்று நடைபெறவுள்ளது.

இந்த சந்திப்பு அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் நடைபெறவுள்ளது.

உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பான வேட்புமனுக்களை மீள அழைப்பது தொடர்பிலும் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.

வேட்புமனு தாக்கல் செய்த வேட்பாளர்கள் கட்சி மாறியதாலும், சிலர் வெளிநாடு சென்றுள்ளதாலும், மேலும் சிலர் அரசியலில் இருந்து விலகியதாலும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு முன்னதாக சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுக்களை ரத்து செய்ய அரசியல் கட்சிகள் தீர்மானித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

(Visited 5 times, 1 visits today)

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை