அமெரிக்காவிடம் கோரிக்கை விடுக்கும் எல் சால்வடார்

மத்திய அமெரிக்க நாட்டின் உள்நாட்டுப் போரின் போது, 1982 ஆம் ஆண்டு நான்கு டச்சு பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் கர்னல் ஒருவரை நாடு கடத்துமாறு எல் சால்வடாரின் உச்ச நீதிமன்றம் அமெரிக்காவிடம் கேட்கும் என்று ஒரு வழக்கறிஞர் தெரிவித்தார்.
செய்தியாளர்களின் மரணத்தில் பங்கு வகித்ததாகக் கூறப்படும் 85 வயதான மரியோ ரெய்ஸ் மேனா மற்றும் இரண்டு முன்னாள் இராணுவ அதிகாரிகளுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.
கூஸ் ஜேக்கபஸ் ஆண்ட்ரீஸ் கோஸ்டர், ஜான் கொர்னேலியஸ் குய்பர் ஜூப், ஹான்ஸ் லோட்விஜ்க் டெர் லாக் மற்றும் ஜோஹன்னஸ் ஜான் வில்லெம்சன் ஆகியோர் மார்ச் 1982 இல் தலைநகர் சான் சால்வடாரின் வடக்கே ஒரு கிராமப்புறத்தில் ஒரு ஆவணப்படத்தை படமாக்கிக்கொண்டிருந்தபோது கொல்லப்பட்டனர்.
போர்க்குற்றங்களை மன்னிக்கும் சட்டம் இயற்றப்பட்ட பிறகு, 1993 ஆம் ஆண்டு இந்த வழக்கு முடக்கப்பட்டது.
ஆனால் 2016 ஆம் ஆண்டு இந்தச் சட்டம் அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று தீர்ப்பளிக்கப்பட்ட மீண்டும் வழக்கு விசாரிக்கப்பட்டது.
ரெய்ஸ் 1980களில் இராணுவ இணைப்பாளராகப் பணியாற்றினார் மற்றும் வர்ஜீனியாவில் தொடர்ந்து வசித்து வருகிறார்.
கொலைகள் நடந்த நேரத்தில், அவர் ஒரு இராணுவ காலாட்படை படைப்பிரிவின் தளபதியாக இருந்தார்.