ஆசியா

எல்லை அருகே பாகிஸ்தான் படைகளுடனான மோதலில் எட்டு தலிபான்கள் உயிரிழப்பு

பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் மற்றும் தலீபான்களிடையே மோதல் வெடித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் பதுங்கி இருக்கும் தெஹ்ரிக்-இ-தலீபான் என்ற அமைப்பை சேர்ந்தவர்கள் பாகிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல்களை நிகழ்த்தி வருவதாக பாகிஸ்தான் அரசு குற்றம் சாட்டி வருகிறது.

சமீபத்தில் ஆப்கானிஸ்தானில் உள்ள தெஹ்ரிக்-இ-தலீபான் அமைப்பினரின் முகாம்களை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 4 முகாம்கள் அழிக்கப்பட்டதாகவும், ஏராளமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்தது.

ஆனால், பாகிஸ்தான் ராணுவத்தின் தாக்குதலில் வாரிஸ்தான் அகதிகள் பலர் கொல்லப்பட்டதாக ஆப்கானிஸ்தானில் ஆட்சி செய்து வரும் தலீபான் அரசாங்கத்தின் பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்தது. இதனை தொடர்ந்து ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் எல்லை அருகே உள்ள கோஸ்காரி, மதா சங்கர், கோட் ரகா மற்றும் டாரி மெங்கல் உள்ளிட்ட இடங்களில் ராணுவ சோதனை சாவடிகளை குறிவைத்து தலீபான்கள் தாக்குதல் நடத்தினர்.

இதற்கு பாகிஸ்தான் ராணுவத்தினர் பதிலடி கொடுத்தனர். இந்த மோதலில் 8 தலீபான்கள் பலியானதாகவும், பாகிஸ்தான் வீரர் ஒருவர் உயிரிழந்ததாகவும் பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்தது. அதே சமயம், தலீபான்கள் தரப்பில் 19 பாகிஸ்தான் வீரர்களை சுட்டுக் கொன்றதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

(Visited 40 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்