ஆசியா இன்றைய முக்கிய செய்திகள்

சீனாவில் 21 வயது மாணவன் கத்தியால் குத்தியதில் 8 பேர் பலி

கிழக்கு சீனாவில் உள்ள தொழிற்கல்வி பள்ளியில் கத்திக்குத்து தாக்குதல் நடத்தியதில் 8 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 17 பேர் காயமடைந்துள்ளனர்.

சந்தேகநபரான பள்ளியின் முன்னாள் மாணவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

Jiangsu மாகாணத்தில் Yixing நகரில் உள்ள Wuxi Vocational Institute of Arts and Technologyல் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக பொலிசார் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர் 21 வயதான பாடசாலையின் முன்னாள் மாணவர் எனவும், அவர் இந்த வருடம் பட்டதாரியாக இருந்ததாகவும், ஆனால் அவர் பரீட்சையில் சித்தியடையவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

“அவர் தனது கோபத்தை வெளிப்படுத்துவதற்காக பள்ளிக்கு திரும்பி இந்த கொலைகளை செய்துள்ளார்,” என்று சந்தேக நபர் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர்.

காயமடைந்தவர்களுக்கு சிகிச்சையளிக்க அவசர சேவைகள் முழுமையாக அணிதிரட்டப்பட்டுள்ளதாகவும், தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பின்தொடர்தல் பராமரிப்பு வழங்குவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

KP

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!