ஆப்பிரிக்கா

எரிபொருள் விலையை 17 சதவீதம் வரை உயர்த்திய எகிப்து : பணவீக்கத்துடன் போராடும் மக்களுக்கு பேரிடி!

எகிப்து  எரிபொருள் விலையை 10% முதல் 17% வரை உயர்த்தியுள்ளது. இது இது பொருட்கள் மற்றும் சேவைகளின் விலையை பாதிக்கும் என எதிர்வுக்கூறப்பட்டுள்ளது.

பெட்ரோலியப் பொருட்களின் விற்பனை விலைகள் மற்றும் அவற்றின் அதிக உற்பத்தி மற்றும் இறக்குமதி செலவுகளுக்கு இடையே உள்ள இடைவெளியைக் குறைக்கும் வகையில்” இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.

எகிப்தியர்கள் உயர்ந்து வரும் பணவீக்கத்துடன் போராடி வருகின்ற நிலையில் அரசாங்கத்தின் இந்த அறிவிப்பு மக்கள் மத்தியில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதிய விலைகளின்படி, ஒரு லிட்டர் டீசலின் விலை 11.5 பவுண்டுகள் ($0.23) இலிருந்து 13.50 பவுண்டுகள் ($0.25) வரை  உயர்த்தப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் 92-ஆக்டேன் பெட்ரோலின் விலை அதிகரித்தது. 13.75 பவுண்டுகளில் ($0.28) 15.25 பவுண்டுகளாக ($0.31) உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

VD

About Author

You may also like

ஆப்பிரிக்கா

வடக்கு காங்கோவில் 22 பேரை கடத்திய ஆயுதம் ஏந்திய குழுவினர்!

வடக்கு காங்கோவில் உள்ள கிராமமொன்றில் இருந்து குழந்தைகள் உள்பட 22 பேர் கடத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாஸ்-யூலே மாகாணத்தில் உள்ள அங்கோ பிரதேசத்தில் உள்ள நகரங்களை வெள்ளை இராணுவ
ஆப்பிரிக்கா

புர்கினோ பசோவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பு!

புர்கினோ பசோவின் சில பகுதிகளுக்கு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஜிஹாதிகளுக்கு எதிராக போராடுவதற்கும், ஆயுதப் படைகளின் நடவடிக்கைகளை எளிதாக்கும் வகையிலும் இந்த ஊரடங்கு
error: Content is protected !!