கனடாவில் இருந்து நாடுகடத்தப்படவுள்ள ஈழத் தமிழர் : கனேடிய நீதிமன்றம் உத்தரவு!

பிரான்சின் பாரிஸில் நடந்த மோதல் தொடர்பாக கனடாவில் கைது செய்யப்பட்ட குற்றவியல் கும்பல் தலைவர் என நம்பப்படும் இலங்கையர் ஒருவரை பிரான்சுக்கு நாடு கடத்த கனேடிய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் இயங்கி வரும் ஆவா கும்பலின் தலைவன் என கூறப்படும் ‘அஜந்தன் சுப்பிரமணியம்’ எனப்படும் “பிரசன்ன நல்லலிங்கம்” கடந்த வருடம் டிசம்பர் மாதம் கனடா ரொறன்ரோவில் வைத்து கைது செய்யப்பட்டார்.
அவர் 2021 ஆம் ஆண்டு இலங்கையிலிருந்து தப்பிச் சென்று அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் கனடாவில் சட்டவிரோதமாக வசித்து வருகிறார். மேலும், இந்த நாட்டில் கொலைகள் உட்பட பல குற்றங்களுக்காக அவர் தேடப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
2022 ஆம் ஆண்டு பிரான்சில் நடந்த ஒரு கொலை வழக்கில் அவர் சந்தேக நபராக இருந்ததாகவும், கடந்த டிசம்பரில் டொராண்டோவில் கைது செய்யப்பட்டு, இதுவரை தடுப்பு மையத்தில் வைக்கப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதன்படி, அந்த சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட இலங்கையர் ‘பிரசன்ன நல்லலிங்கம்’ என்பவரை பிரான்சுக்கு நாடு கடத்த கனடாவின் ஒன்ராறியோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.