கல்வி, தேர்வுகளுக்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும் – ஹரிணி அமரசூரிய!
மாணவர்கள் மீதான தேவையற்ற சுமைகளைக் குறைத்து, பொறுப்புள்ள மற்றும் உலகளவில் சிந்திக்கும் குடிமக்களை வளர்க்கும் வகையில் இலங்கையின் கல்வி முறையை சீர்திருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய, தெரிவித்துள்ளார்.
அத்துடன் கல்வி தேர்வுகளுக்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும், நன்கு வளர்ந்த நபர்களைக் கட்டமைப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தினார்.
கண்டி மகாமாயா பெண்கள் கல்லூரியின் மாணவர் நாடாளுமன்றத்தின் தொடக்க அமர்வில், கலந்துகொண்டு கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், சட்டத்தை நிலைநிறுத்துவதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.
சட்டத்தை மதிக்கும் குடிமக்கள் மட்டுமே உண்மையான சட்டமியற்றுபவர்களாக மாற முடியும் என்பதை மாணவர்களுக்கு நினைவூட்டினார்.





