ட்ரம்பின் குடியேற்றக் கொள்கைகளால் அமெரிக்க பொருளாதாரத்திற்கு காத்திருக்கும் ஆபத்து

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தின் கடுமையான குடியேற்றக் கொள்கைகளால் அமெரிக்காவுக்கு கடும் நெருக்கடி நிலைமை ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனால் அமெரிக்க தொழிலாளர் சக்தியையும் பொருளாதார உற்பத்தியையும் குறைக்கக்கூடும் என அமெரிக்க கொள்கை அறக்கட்டளை நடத்திய புதிய பகுப்பாய்வு எச்சரித்துள்ளது.
நிர்வாகத்தின் கொள்கைகளால் 2028 ஆம் ஆண்டுக்குள் அமெரிக்க தொழிலாளர் சக்தி 6.8 மில்லியன் மக்களாலும், 2035 ஆம் ஆண்டுக்குள் 15.7 மில்லியன் மக்களாலும் குறையக்கூடும் என மதிப்பிட்டுள்ளது.
அகதிகள் சேர்க்கை குறைப்பு, பயணத் தடை மற்றும் தற்காலிக பாதுகாக்கப்பட்ட அந்தஸ்து முடிவுக்கு வந்தது போன்ற கொள்கை மாற்றங்களால் இந்தச் சரிவு ஏற்படும்.
தொழிலாளர் சரிவு காரணமாக, 2025 முதல் 2035 ஆம் ஆண்டுக்கு இடையில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 12.1 டிரில்லியன் டொலர் இழப்பு ஏற்படக்கூடும். இது 2035 ஆம் ஆண்டு தனிநபர் இழப்பாக 34,369 டொராக காணப்படும்.
இந்தக் குடியேற்றக் கொள்கைகள் 2035 ஆம் ஆண்டுக்குள் தேசிய கடனில் 1.74 டிரில்லியன் டொலர் அதிகரிப்பை ஏற்படுத்தக்கூடும் எனவும் பகுப்பாய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
சமீபத்திய ஆண்டுகளில் அமெரிக்க தொழிலாளர் படையின் வளர்ச்சிக்கு வெளிநாட்டுத் தொழிலாளர்களே அவசியம். புதிய பணியாளர்களில் கிட்டத்தட்ட 85 சதவீதம் பேர் வெளிநாட்டவர்களாகும்.
எனினும், குடியேற்றச் சட்டங்களை அமல்படுத்துவதன் மூலம், அமெரிக்க தொழிலாளர்களுக்கு வேலைகளை உருவாக்கவும், பயன்படுத்தப்படாத உள்நாட்டுத் திறனைத் திறக்கவும் ஜனாதிபதி ட்ரம்ப் கொள்கைகள் உதவும் எனவும் வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் குறிப்பிட்டுள்ளார்.