இலங்கை

ஈஸ்டர் தாக்குதல் : பணி இடைநீக்கம் செய்யப்பட்ட புலானாய்வு அதிகாரி!

ஈஸ்டர் தாக்குதல் சம்பம் தொடர்பில் கட்டானைப் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய புலனாய்வு சார்ஜன்ட் ஒருவர் சேவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

குறித்த பொலிஸ் சார்ஜன்ட் தனக்க வழங்கப்பட்ட கடமைகளை செய்யத் தவறியமைக்காக சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் சார்ஜெண்டின் நடவடிக்கைகள் குறித்து ஆரம்ப விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும்  இந்த ஆரம்ப விசாரணையின் அடிப்படையில்  அவருக்கு எதிராக 12 ஒழுக்காற்று மீறல் குற்றச்சாட்டுகளின் கீழ் குற்றப்பத்திரிகை வெளியிடப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதனடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணைகளில் அவர் அனைத்து குற்றச்சாட்டுகளையும் ஒப்புக்கொண்டுள்ளார். இதன்காரணமாக அவரை ஐஜிபி பணி இடைநீக்கம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே ஜூன் 14, 2023 முதல் அவரை சேவையிலிருந்து இடைநீக்கம் செய்து காவல்துறை தலைமையகம் உரிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

(Visited 11 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!