ஆசியா

தைவானை உலுக்கிய நிலநடுக்கம் ; ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவு

தைவானின் கிழக்குப் பகுதியில் உள்ள ஹுவாலியேன் நகரில் ஆகஸ்ட் 16ஆம் திகதியன்று நிலநடுக்கம் ஏற்பட்டது.ரிக்டர் அளவில் 6.3ஆக அது பதிவானது.

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம், காயங்கள் குறித்து இன்னும் தகவல்கள் வெளியிடப்படவில்லை.ஒரே நாளுக்குள் இரண்டாவது முறையாகத் தைவானில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

நிலநடுக்கம் காரணமாகத் தலைநகர் தைப்பேயிலும் அதிர்வுகள் ஏற்பட்டன.இதில் அங்குள்ள கட்டடங்கள் ஆட்டங்கண்டன.

இருப்பினும், நிலத்துக்கு அடியில் உள்ள ரயில் சேவைகள் தொடர்ந்ததாகவும் அவை குறைந்த வேகத்தில் இயக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் கூறினர்.

ஆகஸ்ட் 15ஆம் திகதியன்று தைவானின் வடகிழக்குக் கடற்கரைப் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது.அது ரிக்டர் அளவில் 5.7 ஆகப் பதிவானது.

கடந்த ஏப்ரல் மாதம் ஹுவாலியேன் நகரைச் சக்திவாய்ந்த நிலநடுக்கம் உலுக்கியது.அது கடந்த 25 ஆண்டுகளில் தைவான் கண்டிராத ஆக மோசமான நிலநடுக்கம்.

அதில் குறைந்தது 18 பேர் உயிரிழந்தனர் மற்றும் 900க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

(Visited 50 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!