ஆசியா செய்தி

ஜப்பான் – பிலிப்பைன்ஸ் நாடுகளை உலுக்கிய நிலநடுக்கம்

ஜப்பானின் புக்குஷிமா பகுதியை இன்று 5.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உலுக்கியுள்ளது.

நிலநடுக்கம் 4 கிலோமீட்டர் ஆழம் கொண்டிருந்ததாக அந்நாட்டின் வானிலை ஆய்வகம் கூறியது.

சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை. பொருட்சேதமும் உயிருடற்சேதமும் ஏற்பட்டதாகத் தகவல் இல்லை.

இதேவேளை, பிலிப்பைன்ஸில் இன்று 5.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உலுக்கியுள்ளது.

நிலநடுக்கம் 10 கிலோமீட்டர் ஆழம் கொண்டிருந்ததாகப் பிலிப்பைன்ஸின் எரிமலை, நிலநடுக்க ஆய்வு நிலையம் தெரிவித்தது.

சேதமும் பின்னதிர்வுகளும் ஏற்படக்கூடும் என்று அது எச்சரிக்கை விடுத்தது. பொருட்சேதம் ஏற்பட்டதாகத் தகவல் ஏதுமில்லை.

பிலிப்பைன்ஸில் “Ring of Fire” எனும் பகுதியில் அமைந்துள்ளது. “Ring of Fire” பகுதி பசிபிக் கடலில் உள்ளது. அதில் அடிக்கடி நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு போன்ற இயற்கைச் சீற்றங்கள் இடம்பெறும்.

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!