உலகம் செய்தி

ஈரான் உச்ச தலைவர் தாக்குதலுக்கு இலக்கானாரா – அமெரிக்காவின் அதிரடி அறிவிப்பு

ஈரான் தொடர்பான அண்மைய பதற்றநிலை குறித்து அமெரிக்க பாதுகாப்புத் துறை செயலாளர் Pete Hegseth முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளார்.

ஈரானின் புதிய உச்ச தலைவர் தற்போது தலைமறைவாக இருப்பதாகவும், அவர் காயமடைந்திருக்கலாம் அல்லது கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

அமெரிக்கா, ஈரானின் ஏவுகணை திறனை குறைக்கும் நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருவதாகவும், அவர்கள் ஏவுகின்ற ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தி அழித்து வருகிறோம் என்றும் பென்டகன் தெரிவித்துள்ளது.

மேலும் புதிய ஏவுகணைகள் உருவாக்கும் திறன் அவர்களிடம் இல்லாமல் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், உலகளாவிய எண்ணெய் விலை உயர்வை கட்டுப்படுத்தும் முயற்சியாக, கடலில் கப்பல்களில் ஏற்றப்பட்ட ரஷ்ய எண்ணெய் மற்றும் பெட்ரோலியத்தை வாங்கும் பிற நாடுகளுக்கு விதிக்கப்பட்ட சில தடைகளை அமெரிக்கா தளர்த்தியுள்ளது

மேலும், பெய்ரூட் (Beirut) நகரில் துண்டுப்பிரசுரங்களை வீசி, Hezbollah அமைப்புக்கு எதிராக எழுந்து நிற்குமாறு இஸ்ரேல் குடியிருப்பாளர்களை வலியுறுத்தியுள்ளது.

இதனிடையே ஈராக் மீது வீழ்ந்த எரிபொருள் நிரப்பும் விமானத்தில் இருந்த ஆறு பணியாளர்களும் உயிரிழந்ததாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் விரோதத் துப்பாக்கிச் சூடு அல்லது நட்புரீதியான துப்பாக்கிச் சூடு காரணமாக இல்லை என்றும் அவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!