தெலுங்கானாவில் பண்ணை வீட்டில் போதை விருந்து; 22 சிறுவர்கள் உட்பட 65 பேர் கைது

தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தின் மொய்னாபாத்தில் உள்ள ஒரு பண்ணை வீட்டில் போதை விருந்து(Rave party) நடப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அங்கு 22 சிறுவர்கள் உட்பட 65 பேர் போதையில் இருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்தனர். மொத்தமாக வந்தவர்களில் 12 பேர் பெண்கள், அவர்களில் ஐந்து பேர் சிறுமிகள்.
அவர்கள் அனைவரையும் காவல்துறையினர் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதில் இருவர் கஞ்சா புகைத்திருந்தது தெரியவந்தது. மற்றவர்கள் மது அருந்தியுள்ளனர்.
அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
இதற்கிடையே சமூகவலைத்தளம் மூலமாக நபர்களை திரட்டி போதை விருந்துக்கு ஏற்பாடு செய்ததாக கனடாவை சேர்ந்த இஷான் உள்பட 6 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
(Visited 7 times, 1 visits today)