இலங்கை

இலங்கையில் போதைப்பொருள் அச்சுறுத்தல் : கட்டுப்படுத்த பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள சந்தர்ப்பம்!

நாட்டில் வேகமாகப் பரவிவரும் போதைப்பொருள் அச்சுறுத்தலை உடனடியாகக் கட்டுப்படுத்துவதற்கும் ஒழிப்பதற்கும் அமுல்படுத்தப்பட வேண்டிய வழிமுறைகள் தொடர்பில் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் வழங்குவதற்கும்  பொதுமக்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

பொது மக்கள் தங்கள்  கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை legis_com@parliament.lk என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அல்லது செயலாளர், பாராளுமன்ற சிறப்புக் குழு, இலங்கை நாடாளுமன்றம், ஸ்ரீ ஜெயவர்தனபுர, கோட்டே என்ற முகவரிக்கு அனுப்பிவைக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்துவற்காக சபாநாயகரால் 11 பேர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அனைத்து ஆர்வமுள்ள தரப்பினரும் நிறுவனங்களும் அக்டோபர் 12, 2023 அன்று அல்லது அதற்கு முன் தொடர்புடைய முன்மொழிவுகள் மற்றும் கருத்துகளை சமர்ப்பிக்கலாம் என்று குழு தெரிவித்துள்ளது.

(Visited 7 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்