இலங்கை செய்தி

செக் குடியரசிடம் இருந்து இலங்கைக்கு குரங்குகள் மற்றும் பறவைகள் நன்கொடை

செக் குடியரசு இலங்கைக்கு நன்கொடையாக வழங்கிய மூன்று “ஈமு” பறவைகளும் நான்கு “ரிங் டெயில் லெமூர்” குரங்குகளும் நேற்று இரவு நாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

விலங்கு பரிமாற்ற திட்டத்தின் கீழ் அவைகள் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டன.

இந்த 4 மாத வயதுடைய “ஈமு” பறவைகள் அவுஸ்திரேலியாவை பூர்வீகமாகக் கொண்ட பறக்க முடியாத பறவைகளில் இரண்டாவது இடத்தில் உள்ளன.

ரிங்-டெயில் லெமூர் என்பது மடகாஸ்கரை பூர்வீகமாகக் கொண்ட ஒரு அழிந்துவரும் இனமாகும்.

இரண்டு வயதுடைய இரண்டு ஆண் லெமூர் குரங்குகளும், 11 வயதுடைய இரண்டு பெண் லெமூர் குரங்குகளும் அவற்றுள் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவைகள் ஒக்டோபர் 6 ஆம் திகதி வரை பின்னவல வகொல்ல மிருகக்காட்சிசாலையில் ஒரு மாதம் தனிமைப்படுத்தப்பட்ட பின்னர், அதே மிருகக்காட்சிசாலையில் பொது கண்காட்சிக்காக அவை வழங்கப்படவுள்ளன.

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!