இலங்கை இன்றைய முக்கிய செய்திகள்

ஈஸ்டர் ஞாயிறு: இலங்கையில் தேவாலயங்களுக்கு சிறப்பு பொலிஸ் பாதுகாப்பு

ஈஸ்டர் ஞாயிறு தினத்தை முன்னிட்டு மத அனுஷ்டானங்களை நடத்தும் தேவாலயங்களுக்கு விசேட பாதுகாப்பு நடவடிக்கைகளை இலங்கை பொலிஸார் அறிவித்துள்ளனர்.

வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 18) மற்றும் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 20) ஆகிய நாட்களில் விசேட மத வழிபாடுகள் இடம்பெறவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அந்தவகையில், பக்தர்களின் பாதுகாப்பிற்காக விசேட பொலிஸ் பாதுகாப்பை அமுல்படுத்துமாறு பதில் பொலிஸ் மா அதிபர் (IGP) பிரியந்த வீரசூரிய பணிப்புரை விடுத்துள்ளார்.

இந்த காலப்பகுதியில் அதிக மக்கள் கூடும் தேவாலயங்களை அடையாளம் கண்டு அப்பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்துமாறு காவல்துறைக்கு பதில் பொலிஸ் மா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளார்.

ஈஸ்டர் ஞாயிறு அன்று பாதுகாப்பை உறுதி செய்வதற்காக காவல்துறை, சிறப்பு அதிரடிப்படை (STF) மற்றும் முப்படை வீரர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

(Visited 31 times, 1 visits today)

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்