கிறிஸ்துமஸ் காலத்தில் துஷ்பிரயோகம் தொடர்பான அழைப்புகள் அதிகரிப்பு
கிறிஸ்துமஸ் விடுமுறை காலத்தில், வடக்கு அயர்லாந்து பொலிஸாருக்கு கிடைத்த
துஷ்பிரயோகம் தொடர்பான அழைப்புகள் கடந்த ஆண்டை விட அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
2025 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 20 ஆம் திகதி முதல் 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 02 ஆம் திகதி வரை,
பொலிஸாருக்கு மொத்தம் 1,407 அழைப்புகள் வந்துள்ளன.
கடந்த ஆண்டின் அதே காலகட்டத்தை விட 117 அழைப்புகள் அதிகமாக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த பத்து ஆண்டுகளில் பதிவான நான்காவது அதிகபட்ச எண்ணிக்கை இதுவென தெரிவிக்கப்படுகிறது.
புத்தாண்டு தினமான ஜனவரி 1, 2026 அன்று அதிகபட்சமாக 116 அழைப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கிறிஸ்துமஸ் தினத்தில் 115 அழைப்புகள் வந்ததாக கூறப்படுகிறது.





