ஆசியா இன்றைய முக்கிய செய்திகள் செய்தி

தாய்லாந்தில் உரிமையாளர் உயிரிழந்ததனை அறியாமல் 2 மாதங்களாக காத்திருக்கும் நாய்

தாய்லாந்தில் உரிமையாளருக்காக 2 மாதங்களாகக் காத்திருக்கும் நாய் தொடர்பான செய்தி மனத்தை நெகிழ வைத்துள்ளது.

நாயும் நாயின் உரிமையாளரும் Nakhon Ratchasima மாநிலத்தில் உள்ள 7-Eleven கடை வாசலில் இருப்பதாக தெரியவந்துள்ளது.

உரிமையாளர் நவம்பர் மாதத்தில் உயிரிழந்துள்ளார். ஆனால் அதனை அறியாத நாய் ஒரு நாள் திரும்பி வந்துவிடுவார் என்ற நம்பிக்கையில் Moo Daeng என்ற நாய் எங்கும் செல்லாமல் காத்திருக்கின்றது.

கடையின் உரிமையாளர் நாயைப் பார்த்துகொள்கிறார். அதற்குப் போர்வையும் அளித்து உணவும் கொடுக்கிறார். மற்ற நாய்ப் பிரியர்களும் உணவு அளிக்கின்றனர்.

Moo Daengஇன் கதை அண்மையில் Facebook பக்கத்தில் பகிரப்பட்டது. ஒரு பதிவு 23,000 விருப்பக்குறிகளையும் 1,200 கருத்துகளையும் பெற்றது.

எவ்வாறு ஜப்பானில் Hachi என்ற நாய் அதன் உரிமையாளருக்காகத் தொய்வின்றிக் காத்திருந்ததோ அதைப் போன்று Moo Daeng நாயும் காத்திருக்கிறது என்று இணையவாசிகள் குறிப்பிட்டுள்ளனர்.

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!