இலங்கை

இலங்கையில் வைத்தியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு

கஷ்டப் பிரதேச வைத்தியசாலையாக குறிப்பிடப்பட்ட பெரும்பாலான வைத்தியசாலைகளின் பெயர்களை நீக்கியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (07) வைத்தியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எடுத்த தீர்மானத்துக்கு அமைவாக ஏழு கோரிக்கைகளை முன்வைத்து குறித்த பகிஷ்கரிப்பு இடம்பெற்று வருகின்றது.

கடந்த காலங்களில் வடக்கு கிழக்கில் கஷ்டப் பிரதேச வைத்தியசாலையாக காணப்பட்டிருந்த வைத்தியசாலைகளின் பெயர்கள் தற்போது நீக்கப்பட்டுள்ளதாகவும், தன்னிச்சையாக நீக்க சுகாதார அமைச்சு முடிவு செய்துள்ளதாகவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.

திருகோணமலை மாவட்டம் உட்பட நாடு முழுவதும் 134 க்கும் மேற்பட்ட மருத்துவமனைகள் இந்தக் காரணத்தால் மூடப்படும் அபாயத்தில் உள்ளன எனவும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் பணிபகிஷ்கரிப்பு காரணமாக இன்று அவசர சிகிச்சைகள் மாத்திரம் இடம்பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

(Visited 17 times, 1 visits today)

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!