இலங்கையில் வைத்தியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு

கஷ்டப் பிரதேச வைத்தியசாலையாக குறிப்பிடப்பட்ட பெரும்பாலான வைத்தியசாலைகளின் பெயர்களை நீக்கியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (07) வைத்தியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எடுத்த தீர்மானத்துக்கு அமைவாக ஏழு கோரிக்கைகளை முன்வைத்து குறித்த பகிஷ்கரிப்பு இடம்பெற்று வருகின்றது.
கடந்த காலங்களில் வடக்கு கிழக்கில் கஷ்டப் பிரதேச வைத்தியசாலையாக காணப்பட்டிருந்த வைத்தியசாலைகளின் பெயர்கள் தற்போது நீக்கப்பட்டுள்ளதாகவும், தன்னிச்சையாக நீக்க சுகாதார அமைச்சு முடிவு செய்துள்ளதாகவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.
திருகோணமலை மாவட்டம் உட்பட நாடு முழுவதும் 134 க்கும் மேற்பட்ட மருத்துவமனைகள் இந்தக் காரணத்தால் மூடப்படும் அபாயத்தில் உள்ளன எனவும் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் பணிபகிஷ்கரிப்பு காரணமாக இன்று அவசர சிகிச்சைகள் மாத்திரம் இடம்பெற்றதும் குறிப்பிடத்தக்கது.