இலங்கை

போராட்டத்தில் இறங்கும் வைத்தியர்கள் : சேவைகள் ஸ்தம்பிக்குமா?

நாடாளாவிய ரீதியில் உள்ள அனைத்து வைத்தியசாலைகள் முன்பாகவும் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அகில இலங்கை வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

07 கோரிக்கைகைளை முன்வைத்து முன்னெடுக்கப்படவுள்ள கவனயீர்ப்பு போராட்டம் இன்று (22.09) பிற்பகல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த போராட்டத்திற்கு சுகாதார ஊழியர்கள், தொழிற்சங்கங்கள், சிவில் மத மற்றும் வர்த்தக அமைப்புகளும் ஆதரவளிக்கவுள்ளதாக அகில இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் டொக்டர் ஜயந்த பண்டார தெரிவித்துள்ளார்.

அத்தியாவசிய மருந்துப் பற்றாக்குறை, சுகாதார ஊழியர் பற்றாக்குறை, தரக்குறைவான மருந்துகளை இறக்குமதி செய்தல், சுகாதார ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்காமை, அதிவேக மனநலம் குன்றிய பிள்ளைகளுக்கு நுண்ணுயிர் எதிர்ப்பிகள் மற்றும் மருந்துகளை வழங்காமை போன்றவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!