செய்தி வாழ்வியல்

கருஞ்சீரகம் யாரெல்லாம் சாப்பிடக்கூடாது தெரியுமா?

கருஞ்சீரகத்தின் பக்க விளைவுகள் மற்றும் அதை யாரெல்லாம் சாப்பிடக்கூடாது என்பதைப் பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.

கருஞ்சீரகத்தால் குணப்படுத்த முடியாத நோய்களை இல்லை என்று கூறலாம் .பல வகையான புற்று நோய்களுக்கு கருஞ்சீரகத்திலிருந்து தான் மருந்து தயாரிக்கப்படுகிறது. கருஞ்சீரகத்தில் 97 சதவீதம் நன்மை இருந்தாலும் 3% பக்க விளைவுகளும் உள்ளது. அளவுக்கு அதிகமாக தொடர்ந்து பலமுறை எடுத்துக் கொண்டாலோ அல்லது பல வியாதி இருப்பவர்கள் எடுத்துக் கொண்டாலும் பல பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.

கருஞ்சீரகத்தை யாரெல்லாம் சாப்பிடக்கூடாது?
கருஞ்சீரகத்தை ஒரு மண்டலம் அல்லது இரண்டு மண்டலம் தான் சாப்பிட வேண்டும் .அதை தவிர்த்து வருட கணக்கில் தொடர்ந்து சாப்பிட்டால் சிறுநீரகக் கோளாறு மற்றும் சிறுநீரக அலர்ஜியை ஏற்படுத்தும் என அமெரிக்காவில் உள்ள MSKCC – (Memorial Sloan Kettering Cancer Center ) என்ற ஆய்வு நிறுவனம் ஆய்வின் முடிவில் தெரிவித்துள்ளனர்.

மேலும் கர்ப்பிணி பெண்கள் எக்காரணத்தைக் கொண்டும் கருஞ்சீரகம் சாப்பிடக்கூடாது என்றும் MSKCC ஆய்வு நிறுவனம் உறுதி செய்துள்ளது .இதனால் கருவில் உள்ள குழந்தைக்கு பாதிப்பு ஏற்படலாம் என்றும் குழந்தை பேருக்கு முயற்சி செய்பவர்களும் கருஞ்சீரகத்தை சாப்பிட கூடாது என்றும் MSKCC நிறுவனம் கூறுகிறது. அதுமட்டுமல்லாமல் பச்சிளம் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பவர்களும் கருஞ்சீரகம் சாப்பிடக்கூடாது.

கருஞ்சீரகத்தின் முக்கியமான பண்புகளில் ஒன்று உயர் ரத்த அழுத்தத்தை குறைக்க கூடியது. அதனால் குறைந்த ரத்த அழுத்தம் உள்ளவர்கள் சாப்பிடக்கூடாது .ஏனென்றால் இது ரத்த அழுத்தத்தின் அளவை மேலும் குறைத்து ஆபத்தான சூழ்நிலையை ஏற்படுத்தும்.

அதேபோல் ரத்தத்தில் அதிக சர்க்கரையை குறைக்கும் தன்மையை கருஞ்சீரகம் கொண்டுள்ளதால் குறைந்த சர்க்கரை அளவு உள்ளவர்களும் எடுத்துக் கொள்ளக் கூடாது.

மூக்கின் வழியாக ரத்தம் ஒரு சிலருக்கு அடிக்கடி வரும் தொந்தரவு இருக்கும் .அவர்கள் கருஞ்சீரகம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இது ரத்தம் உறைதலை தடுத்து ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் பண்பை கொண்டுள்ளது.

Cytochrome p450 substrates போன்ற மருந்துகளை உட்கொள்ளும்போது எக்காரணத்தைக் கொண்டும் கருஞ்சீரகத்தை எடுத்துக் கொள்ளக் கூடாது என்று அமெரிக்காவின் MSKCC ஆய்வு நிறுவனம் கூறியுள்ளது.

எனவே கருஞ்சீரகம் அதிக நன்மையை கொண்டிருந்தாலும் ஒரு சிலர் ஒரு சில நேரங்களில் எடுத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. மேலும் கருஞ்சீரகத்தை உட்கொள்வதற்கு முன் சித்த மருத்துவரின் ஆலோசனை படி குறைந்த காலத்தில் குறிப்பிட்ட அளவு எடுத்துக் கொள்வதன் மூலம் அதன் ஆரோக்கிய நன்மைகளை எளிதில் பெறலாம்.

(Visited 3 times, 1 visits today)
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content