இலங்கை செய்தி

அரசாங்கத்திற்கு பரத் அருள்சாமி எச்சரிக்கை

மலையகப் பெருந்தோட்டப் பகுதிகளில் பேரிடரால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான வீடமைப்புப் பொறுப்பை அரசாங்கமே ஏற்க வேண்டும் எனத் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவர் பரத் அருள்சாமி வலியுறுத்தியுள்ளார்.

ஜனாதிபதியினால் அறிவிக்கப்பட்ட 50 இலட்சம் ரூபா வீடமைப்புத் திட்டத்தில் மலையக மக்கள் புறக்கணிக்கப்படுவதாக அவர் குற்றம் சாட்டினார்.

இந்திய வீடமைப்புத் திட்டம் என்பது லயன் அறைகளை ஒழிப்பதற்கான ஒரு நீண்டகாலத் திட்டம் என்றும், அதனை அரசாங்கத்தின் பேரிடர் நிவாரணக் கடமைகளுடன் இணைக்கக் கூடாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

பெருந்தோட்ட நிறுவனங்களிடமிருந்து நிலத்தைப் பொறுப்பேற்க அரசாங்கத்திற்குச் சட்ட ரீதியான அதிகாரம் உள்ள நிலையில், அதனைச் செய்யத் தவறுவது அரசியல் உறுதிப்பாடற்ற தன்மையையே காட்டுகிறது எனச் சுட்டிக்காட்டிய அவர், மலையக மக்களையும் இந்நாட்டின் சமமான பிரஜைகளாகக் கருதுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

Puvan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!