இலங்கை

AHRC நிறுவனத்தின் ஜனநாயக பங்குதார்ர்களுடனான கலந்துரையாடல் நிகழ்வு

ஜனநாயக பங்குதாரர்களுடனான கலந்துரையாடலும், மக்கள் குறைகேள் களம் ஒன்றினை இன்று (13.08.2023) ஏறாவூர் பற்று (செங்கலடி) பிரதேச சபை ஒன்று கூடல் மண்டபத்தில் இடம்பெற்றது.

AHRC நிறுவனம் ஜனநாயக பங்குதாரர்களை ஒன்றிணைக்கும் செயற்திட்டத்தின் கீழ் பிரதேச சபைகள், சிவில் அமைப்புக்கள், ஊடகவியலாளர்கள் ஆகியோரை 45 நாட்களுக்கு ஒருமுறை ஒன்றிணைப்பதன் ஊடாக சமுகத்தில் இனம்காணப்படும் பிரச்சினைகளை வெளிப்படுத்தி தீர்வுகளை முன்மொழிந்தும் மற்றும் பிரதேச சபையின் செயற்பாடுகளை மக்களுக்கு தெரியப்படுத்தி வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்பு கூறலை ஏற்படுத்துதலை நோக்கமாகக் கொண்டு இச்செயற்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

இதன் அடிப்படையில் இன்று ஏறாவூர் பற்று பிரதேச சபை உத்தியோஸ்தர்கள் தலைமையில் பிரதேச சிவில் அமைப்புக்கள், ஊடகவியலாளர்கள் என 45 பேர் கலந்து கொண்டிருந்தனர் மற்றும் இக்கலந்துரையாடலின் போது மக்கள் எதிர்நோக்கும் பலதரப்பட்ட பிரச்சினைகள் முன்மொழியப்பட்டிருந்தன.

குறிப்பாக பிரதேசத்தில் யானை தாக்கம், வீதி புனரமைப்பு, அரச செயற்பாடுகளில் உள்ள குறைபாடுகள் தொடர்பாகவும் மக்கள் குறிப்பிட்டதுடன் மற்றும் தொழில் இன்மை பற்றிய பிரச்சனைகளையும் சிவில் அமைப்புக்கள் முன்மொழிந்திருந்தனர்.

இதற்காக பிரதேச சபையின் ஊடாக மேற்கொள்ளும் செயற்பாட்டுகளை பிரதேச சபை சார்பாக குறிப்பிட்டு இருந்தனர் AHRC நிறுவனத்தின் பிரதி இணைப்பாளர் திருA. மதன், திட்ட இணைப்பாளர் T. தனுஸ்குமார் மற்றும் கள உத்தியோஸ்தர்கள் கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

(Visited 3 times, 1 visits today)
Avatar

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content