பேரிடர்: 213 பேரின் நிலை குறித்து இன்னும் தகவல் இல்லை!
இலங்கையில் ஏற்பட்ட பேரிடரால் காணாமல்போனவர்களில் 213 பேரின் நிலை குறித்து இன்னும் தெரியவரவில்லை.
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று (6) மதியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் காணாமல்போனவர்களின் எண்ணிக்கையாக 213 பட்டியலிடப்பட்டுள்ளது.
அத்துடன், சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 611 ஆக அதிகரித்துள்ளது.
4 ஆயிரத்து 309 வீடுகள் முழமையாகவும், 69 ஆயிரத்து 635 வீடுகள் பகுதியளவும் சேதம் அடைந்துள்ளன என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
33 ஆயிரத்துக்கு மேற்பட்ட குடும்பங்கள் இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளன.
சீரற்ற காலநிலையால் 5 லட்சத்து 76 ஆயிரத்து 636 குடும்பங்களைச் சேர்ந்த 20 லட்சத்து 54 ஆயிரத்து 535 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.




