அரசியல் இலங்கை செய்தி

அனர்த்த முகாமைத்துவ பொறிமுறை தோல்வி!

இலங்கையில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் அனர்த்த முகாமைத்துவ நடவடிக்கைகள் தோல்வி கண்டுள்ளன என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனை மாற்றியமைத்து தற்காலத்திற்கேற்றாற் போல் இடர் முகாமைத்துவ திட்டத்தை முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

“ பேரழிவால் பாதிக்கப்பட்ட இலட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரங்கள் அழிந்துபோயுள்ளன. அதனை மீள கட்டியெழுப்ப நாம் கை கொடுக்க வேண்டும்.

மக்கள் தமது வீடுகளை இழந்திருக்கிறார்கள். பலரின் முழு வாழ்க்கையுமே அழிந்துபோயுள்ளது. களப் பயணங்களை மேற்கொண்டால் இந்த நிலையை புரிந்து கொள்ள முடியும்.

சீரற்ற வானிலை நிலவரங்களை துல்லியமாக அறிவிப்புச் செய்யும் விதமான பயனுள்ள முன்னெடுப்புகளை நாம் ஆரம்பிக்க வேண்டும்.

நமது நாட்டிற்குத் தேவையான நவீன தொழில்நுட்ப டாப்ளர் ரேடார் கருவிகள் இன்னும் இல்லை.

சுனாமியால் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் பலியாகியுள்ள நிலையில், இடர் முகாமைத்துவ பொறிமுறையானது தோல்வி கண்டுள்ளது.

இரண்டு வார முன்னறிவிப்புகளுக்குப் பிறகும் சரியாக உரிய நடவடிக்கைகளை வகுத்துச் செயற்படுவதில் அரசாங்கம் தோல்வி கண்டுள்ளது.

இதனால் இலட்சக்கணக்கான மக்களின் மனித மற்றும் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டு, அவர்களின் வாழ்வுரிமை பறிக்கப்பட்டுள்ளது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் கூறியுள்ளார்.

Sanath

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!