இலங்கை செய்தி

பேரிடரால் ஏற்பட்ட இழப்பு: டிசம்பர் 20 ஆம் திகதிக்குள் மதிப்பீட்டு அறிக்கை!

“ டித்வா புயலால் இலங்கையில் ஏற்பட்ட பேரிடரால் நிகழ்ந்த இழப்புகள் தொடர்பான ஆரம்பக்கட்ட மதிப்பீடுகளை எதிர்வரும் 20 ஆம் திகதிக்குள் வெளியிடக்கூடியதாக இருக்கும்.”

இவ்வாறு அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ  நம்பிக்கை வெளியிட்டார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்றது.

இதன்போது பேரிடரால் ஏற்பட்ட இழப்புகள் தொடர்பில் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதா என அமைச்சரிடம் வினவப்பட்டது.

இதற்கு பதிலளித்த அவர் கூறியவை வருமாறு,

“ சில நிறுவனங்களால் உத்தேச இழப்பீடு விபரம் வெளியிடப்பட்டுள்ளது எனினும், முழுமையான விபரங்களே மிக முக்கியம். இதற்காக சில இடங்களில் உலக வங்கியின் உதவிகள் கோரப்பட்டுள்ளன.

அந்தவகையில் டிசம்பர் 15 முதல் 20 ஆம் திகதிக்குள் இழப்பு பற்றிய மதிப்பீட்டை வெளியிட முடியும் என நம்புகின்றோம்.” என்றார்.

Sanath

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!