இலங்கை

இலங்கை – இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் பதவி விலகுவதாக அறிவிப்பு!

இலங்கை – இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் டபிள்யூ.ஏ.கே. விஜேரத்ன தனது பதவியை இராஜினாமா செய்வதாகவும், அதற்கான கடிதம் இன்று (07.10) ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

விஜேரத்னவின் சட்டத்தரணிகள் உச்ச நீதிமன்றில் இது தொடர்பில் அறிவித்துள்ளனர்.

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்தின் நியமனத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மனுக்கள் இன்று பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

திரு.பிரிதி பத்மன் சூரசேன, திரு.குமுதுனி விக்கிரமசிங்க மற்றும் திரு.ஜனக் டி சில்வா ஆகிய மூவரடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

பிரதிவாதியான இலஞ்ச ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி உதித இகலஹேவா, தனது கட்சிக்காரர் மீண்டும் நீதி சேவையில் இணைவதற்கு தீர்மானித்துள்ளதாகவும், அதன் பிரகாரம் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் பதவியில் இருந்து விலக தீர்மானித்துள்ளதாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

See also  புட்டின் அனுப்பிய தனிப்பட்ட செய்தியுடன் இலங்கை ஜனாதிபதியை சந்தித்தார் ரஷ்ய தூதர்!

இன்று பிற்பகல் 3.00 மணிக்கு தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியிடம் கையளிப்பதாக நீதிமன்றினால் நடத்தப்பட்ட விசாரணையின் போது ஜனாதிபதியின் சட்டத்தரணி தெரிவித்தார்.

இதன்படி, குறித்த மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உச்ச நீதிமன்றம் அனுமதித்ததுடன், பிரதிவாதி பதவியில் இருந்து விலகத் தீர்மானித்துள்ளதால், இடைக்கால உத்தரவு தொடர்பான விடயங்களை பரிசீலிக்க வேண்டிய அவசியமில்லை என தரப்பினர் நீதிமன்றில் சுட்டிக்காட்டினர்.

டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் ஸ்ரீலங்கா, சமூக ஆர்வலர் விதுர ரலபனாவ மற்றும் ஊடகவியலாளர் ருவானி பொன்சேகா ஆகியோரால் இந்த மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

இலஞ்ச ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகமாக டபிள்யூ. ஏ. கே விஜேரத்னவை நியமிப்பதற்கு அரசியலமைப்பு பேரவையின் பரிந்துரையின் பேரில் அப்போதைய ஜனாதிபதி எடுத்த தீர்மானம் சட்டத்திற்கு முரணானது எனவும் மேற்படி தீர்மானத்தை செல்லுபடியற்ற உத்தரவு பிறப்பிக்குமாறும் கோரி இந்த மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன.

(Visited 1 times, 1 visits today)
Avatar

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content