இலங்கை

இலங்கையில் டிஜிட்டல் கல்வித் திட்டம் – அமெரிக்காவில் இருந்து கிடைக்கும் உதவி

இலங்கையின் டிஜிட்டல் கல்வித் திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக அமெரிக்கா நடவடிக்கை எடுத்துள்ளதாக கேட்ஸ் அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

பிரதமர் ஹரிணி அமரசூரியவுடனான சந்திப்பின் போது, கேட்ஸ் அறக்கட்டளையின் உலகளாவிய மேம்பாட்டுத் தலைவர் கிறிஸ் எலியஸ் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் சிறுவர்களினதும், பெண்களினதும் ஊட்டச்சத்துத் தேவைகளை மேம்படுத்துதல், விவசாயத் துறையை மேம்படுத்துவதில் புதிய டிஜிட்டல் கருவிகளின் பயன்பாடு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில், கேட்ஸ் அறக்கட்டளை ஒத்துழைப்பு வழங்க தயாராக உள்ளதாகவும் கிறிஸ் எலியஸ் தெரிவித்தார்.

அத்துடன், பிராந்தியத்தில் டிஜிட்டல் தொழில்நுட்ப மேம்பாட்டை முன்னெடுப்பதில் அறக்கட்டளையின் பங்களிப்பு குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

இந்தநிலையில், பாடசாலைகளில் மதிய உணவு வழங்குதல் தொடர்பான அரசாங்கத்தின் திட்டங்கள் குறித்து, கேட்ஸ் அறக்கட்டளை பிரதிநிதிகளுக்குத் பிரதமர் தெளிவுபடுத்தியுள்ளார்.

அத்துடன், பிரதமரின் செயலாளர் தலைமையிலான டிஜிட்டல் கல்விப் பணிக்குழுவின் செயற்பாடுகள் குறித்தும் பிரதமர், கேட்ஸ் அறக்கட்டளை பிரதிநிதிகளுக்கு எடுத்துரைத்துள்ளார்.

இதேவேளை, பிரதமரின் கோரிக்கைக்கு ஏற்ப, டிஜிட்டல் கல்விப் பணிக்குழுவின் செயற்பாடுகளுக்கும், 2026 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கவிருக்கும் உத்தேச கல்விச் சீர்திருத்தத்திற்கும் ஒத்துழைப்பு வழங்குவதாக கேட்ஸ் பிரதிநிதிகள் பிரதமருக்கு உறுதியளித்துள்ளனர்.

(Visited 2 times, 2 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
Skip to content