இஷாரா செவ்வந்தி நாட்டை விட்டுத் தப்பி சென்றாரா? பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்

இஷாரா செவ்வந்தி நாட்டை விட்டுத் தப்பிச் செல்லவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவம் தொடர்பில் இதுவரை 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
அத்துடன் குறித்த கொலை சம்பவத்துடன் தொடர்புடைய இஷாரா செவ்வந்தி நாட்டை விட்டுத் தப்பிச் செல்லவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் சந்தேக நபரைப் பற்றிய சில தகவல்கள் ஏனைய சந்தேக நபர்களின் மூலம் தெரியவந்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் கூறுகின்றார்.
(Visited 3 times, 3 visits today)