இலங்கை

டயனா கமகேவின் மனு குறித்த வழக்கு விசாரணைக்கு திகதியிடப்பட்டது!

தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்துச் செய்து  உத்தரவிடுமாறு கோரி இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தாக்கல் செய்த ரிட் மனுவை மீள் பரிசீலனை செய்வதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் திகதி நிர்ணயித்துள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் டயனா கமகே பிரித்தானிய பிரஜை என்பதால், அவருடைய உறுப்புரிமை இரத்து செய்யப்பட வேண்டும் எனக் கோரி ஓஷல ஹேரத் என்ற சமூக ஆர்வலர் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இதன்படி  தாம் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வகிக்கத் தகுதியற்றவர் எனவும், தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை செல்லுபடியற்றதாக ஆணை பிறப்பிக்குமாறும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுதாரர் கோரியுள்ளார்.

இந்த மனு இன்று (25.07) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில்,  இந்த வழக்கை முழு பெஞ்ச் முன்பு மீண்டும் விசாரிக்கப்படும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, மனு மீதான விசாரணையை செப்டம்பர் 14-ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

(Visited 8 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்