செய்தி விளையாட்டு

மீண்டும் கேப்டனாக களமிறங்கும் தோனி – தொடரில் இருந்து விலகிய ருதுராஜ்

நடப்பு ஐபிஎல் தொடரின் சென்னை அணியின் கேப்டனாக இருந்த வந்த ருதுராஜ் காயம் காரணமாக விலகியுள்ளார்.

ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஆர்ச்சர் பந்து வீச்சில் ருதுராஜ் காயமடைந்தார். இதன் காரணமாக அவர் விலகியுள்ளார்.

அவருக்கு பதிலாக மீண்டும் எம் எஸ் தோனி கேப்டனாக நியமிக்கபட்டு உள்ளார் என அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் தெரிவித்துள்ளார்.

கடந்த 2022ம் ஆண்டில் ஜடேஜா கேப்டனாக நியமிக்கப்பட்டார். அப்போது சிஎஸ்கே தொடர் தோல்விகளை சந்தித்தது. இதனையடுத்து மீண்டும் எம் எஸ் தோனி கேப்டனாக நியமிக்கப்பட்டார். அதேபோல இந்தமுறையும் தோனி கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுவரை 5 போட்டிகளில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது. இதன் மூலம் புள்ளிப்பட்டியலில் சிஎஸ்கே 4வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!