இலங்கை

இலங்கை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு தயார் : தம்மிக்க பெரேரா

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தீர்மானத்தின் பேரில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடத் தயார் என பாராளுமன்ற உறுப்பினரான தம்மிக்க பெரேரா அறிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் குறித்து முடிவெடுக்கும் வரை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட நான் தயாராக உள்ளேன். எனது வெற்றியை நோக்கி தொடர்ந்து செயற்படும் அதேவேளையில் அவர்களின் தீர்மானத்திற்காக காத்திருக்கிறேன்” என எம்.பி பெரேரா தெரிவித்துள்ளார்.

இன்று காலை நடைபெற்ற SLPP இன் தொழில் வல்லுநர்களுக்கான நிலையத்தின் திறப்பு விழாவின் போதே பெரேரா இதனைத் தெரிவித்தார்.

பொருளாதார அபிவிருத்திக்கான தனது அர்ப்பணிப்பை வலியுறுத்திய பெரேரா, “பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்வதில் எனது முதன்மையான கவனம் செலுத்தப்படுகிறது. நான் மேடையேற வேண்டுமானால், பொருளாதாரத்தை எப்படி மேம்படுத்த திட்டமிட்டுள்ளேன் என்பதை விளக்க வேண்டும். எனவே, தற்போது பொருளாதாரத் திட்டத்தை வகுத்து வருகிறேன்” என்றார்.

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!