செய்தி

ஜனாதிபதி பதவியை குறிவைத்துள்ள தம்மிக்க பெரேரா!! கட்சிகளின் ஆதரவை பெற தீவிர ஆர்வம்

நாடாளுமன்ற உறுப்பினரும் பிரபல வர்த்தகருமான தம்மிக்க பெரேரா எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக களமிறங்குவதற்கான ஆரம்பகட்ட கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளார்.

அதன்படி மற்ற கட்சிகளின் ஆதரவை எப்படி பெறுவது என்பது குறித்து ஆலோசிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்கட்சிகளின் ஆதரவுடன் 51 வீதம் பெறலாம் என்ற நம்பிக்கை அவருக்கு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக முன்மொழியப்பட்டவர்களில் தம்மிக்க பெரேராவும் அடங்குவார் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் சாகர காரியவசம் அண்மையில் தெரிவித்தார்.

எவ்வாறாயினும் ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது அறிவிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!