இலங்கை

வங்கக் கடலை சுற்றி உருவாகும் காற்றழுத்த தாழ்வு நிலை : இலங்கை வானிலையில் மாற்றம்!

வடக்கு வங்கக் கடலைச் சுற்றியுள்ள வளிமண்டலத்தில் நாளை (29.08) குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்பு உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அந்த கடற்பரப்புகளில் மிக பலத்த காற்றுடன் (மணித்தியாலத்துக்கு 70-80 கி.மீ.) கனமழை பெய்யக்கூடும் என்றும், அந்த கடற்பரப்புகள் மிகவும் கொந்தளிப்பாக இருக்கும் என்றும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதன் காரணமாக வடக்கு வங்காள விரிகுடாவின் ஆழ்கடல் பகுதியில் பல நாள் மீன்பிடி படகுகள் மற்றும் கடற்படை கப்பல்களில் ஈடுபடும் பணியாளர்கள் உடனடியாக நிலம் அல்லது பாதுகாப்பான இடத்திற்கு வருமாறு வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்று (29) பிற்பகல் 3:30 மணிக்கு வெளியிடப்பட்ட அறிவிப்பு நாளை (29) பிற்பகல் 3:30 மணி வரை செல்லுபடியாகும்.

(Visited 2 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!