ஐரோப்பா

ஜெர்மனியில் நாடு கடத்தல் நடவடிக்கை தீவிரம் – தயார் நிலையில் விமானங்கள்

ஜெர்மனியில் புதிய அரசாங்கம் ஆட்சி அமைக்கவுள்ள நிலையில், நாடு கடத்தல் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்நிலையில் இந்த ஆண்டு பல நாடுகடத்தல் விமானங்களை ஏற்பாடு செய்யப்போவதாக ஹெஸ்ஸியின் உள்துறை அமைச்சர் ரோமன் போசெக் தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம், ஜெர்மனியில் இருந்து பாகிஸ்தானுக்கு 43 பேர் ஒரு தனி விமானத்தில் அழைத்துச் செல்லப்பட்டனர்.

அதில் ஹெஸ்ஸியைச் சேர்ந்த ஆறு பேர் அடங்குவதோடு அவர்களில் இருவர் குற்றவாளிகளும் ஆவர்.

விமானங்களுக்கு மேலதிகமாக, ஹெஸ்ஸியிலிருந்து நாடுகடத்தலுக்கு பேருந்துகளும் பயன்படுத்தப்படுகின்றன.

மேலும், இந்த பிரச்சினையில் ஹெஸ்ஸி மாநில அரசு, மத்திய அரசு மற்றும் பிற மாநிலங்களுடன் இணைந்து பணியாற்றுகிறது.

அல்டர்னேட்டிவ் ஃப்யூர் டாய்ச்ச்லாந்த் அரசியல்வாதிகள் நாடுகடத்துவதில் அரசாங்கத்தின் முயற்சிகளை விமரசித்திருந்தனர்.

(Visited 3 times, 3 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்