இலங்கை

வெலிகம துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சர் விளக்கம்!

கொலை செய்யப்பட்ட வெலிகம பிரதேச சபை தலைவர், பாதாள குழுவுடன் தொடர்புபட்டவர். பாதாள குழுக்களுக்கிடையிலான மோதலின் விளைவாகவே இக்கொலைச்சம்பவம் இடம்பெற்றுள்ளது என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

வெலிகம பிரதேச சபைக்குள் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,  ” மேற்படி துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தால் பொதுமக்கள் பாதுகாப்பிற்கு எவ்வித அச்சுறுத்தலும் ஏற்படவில்லை.

இந்நாட்டில் பாதாளக்குழுக்கள் உள்ளன. இக்குழுக்கள் பிளவுபட்டு காணப்படுகின்றன. அவற்றுக்கிடையில் மோதல் உள்ளது. ஆயுதங்களும் உள்ளன. இன்றைய தினம் இடம்பெற்ற சம்பவமும் பாதாள குழுவுடன் தொடர்புபட்டதாகும்.

அவர் மக்கள் பிரதிநிதி என்றபோதிலும் பாதாள குழுவுடன் தொடர்புபட்டவர். அவருக்கு எதிராக ஆறு வழங்குகள் உள்ளன. சிறை தண்டனையைக்கூட எதிர்கொண்டவர். இவர் தொடர்பில் விரிவான விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன.

கொலைகளை நாம் அனுமதிப்பதில்லை. மேற்படி சம்பவம் தொடர்பில் விசாரணை இடம்பெற்றுவருகிறது” என்றார்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!