வட அமெரிக்கா

பிரிட்டிஷ் கொலம்பியாவில் அவசர நிலை அறிவிப்பு

கனேடிய நகரமொன்றில், காட்டுத்தீ காரணமாக அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அந்நகர மக்கள் வீடுகளை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்திலுள்ள West Kelowna நகரிலும் Westbank First Nation என்னும் பகுதியிலும் உள்ளூர் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

5,500 வீடுகளுக்கு வெளியேற்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், 1,000க்கும் அதிகமான வீடுகளில் வாழும் மக்களுக்கு வீடுகளை விட்டு வெளியேற உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.McDougall Creek பகுதியில் பற்றியெரியும் காட்டுத்தீ காரணமாகவே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வெளியேற்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளோர் அறிவிப்பு வந்ததும் வீடுகளை விட்டு வெளியேறத் தயாக இருக்குமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.

தீ பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால், தீ எந்த பகுதிகளுக்கு பரவும் என்ற அச்சம் காரணமாக மக்கள் மட்டுமின்றி, தீயணைப்புத்துறையினர் உட்பட, அதிகாரிகளும் பதற்றத்துடனேயே காணப்படும் நிலை, அந்நகரில் மட்டுமல்ல, பிரிட்டிஷ் கொலம்பியா முழுவதுமே காணப்படுகிறது.

(Visited 5 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்
error: Content is protected !!