இலங்கை

கெஹலியவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம் இன்று!

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை மீது இன்று (06.09) விவாதம் நடைபெறவுள்ளது.

இந்த விவகாரம் குறித்து வரும் 08 ஆம் திகதி வரை விவாதம் நடைபெறவுள்ளதுடன், 08 ஆம் திகதி பின்நேரத்தில் வாக்கெடுப்பு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான பிரேரணையை எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவர் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளார்.

நாட்டின் சுகாதாரத்துறை சமீபகாலமாக அதலபாதாளத்திற்குள் சென்றுள்ளது. தரமற்ற மருந்து இறக்குமதி, அரச அங்கீகாரம் பெறாத நிறுவனங்களிடம் இருந்து மருந்து கொள்வனது, மற்றும் அவ்வாறான மருந்தைகளை பயன்படுத்தியமையால் ஒவ்வாமை ஏற்பட்டு பெருமளவான மக்கள் உயிரிழப்பது என பல்வேறு சம்பவங்கள் சமீப காலமாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் இந்த விடயங்களை கருத்தில் கொண்டு சஜித் பிரேமதாச தலைமையிலான எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவந்துள்ளனர்.

அத்துடன் குறித்த பிரேரணைக்கு ஆதரவாக கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கைகளும் நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

(Visited 6 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்