இந்தியா

இந்தியாவில் கோயிலில் சிலிண்டர் வெடிப்பில் பலியானோர் எண்ணிக்கை 8 ஆக உயர்வு

கர்நாடகா மாநில சிலிண்டர் விபத்தில் பலியான ஐயப்ப பக்தர்கள் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. ஹுப்ளியிலுள்ள சிவன் கோயிலில் சிலிண்டர் வெடிப்பில் படுகாயமடைந்த 9 ஐயப்ப பக்தர்களில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.

கர்நாடக மாநிலம் ஹூப்ளியின் சாய் நகர் பகுதியிலுள்ள சிவன் கோயிலுக்கு ஏராளமான ஐயப்பப் பக்தர்கள் வந்து தங்கி வழிபாடு செய்வது வழக்கம். இந்நிலையில், கடந்த டிசம்பர்.23ஆம் தி இரவு 1.30 மணியளவில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில், அங்கு உறங்கிக்கொண்டிருந்த 9 ஐயப்ப பக்தர்களுக்குக் கடுமையான தீக்காயங்கள் ஏற்பட்டன.

இதனைத் தொடர்ந்து கர்நாடக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 9 ஐயப்பப் பக்தர்களும் தீவிர சிகிச்சைப் பெற்று வந்தனர்.

ஆனால், கடந்த டிச. 26ஆம் திகதி நிஜலிங்கப்பா பேரூர் (வயது-58), சஞ்சய் சவ்டட்டி (17) மற்றும் ராஜூ முகேரி (16) மற்றும் லிங்கராஜ் பிர்நூர் (21) ஆகியோரும், டிச.29 அன்று ஷங்கர் சவுகான் (30) மற்றும் மஞ்சுநாத் வாக்மொடே (17) ஆகியோரும் கடந்த டிச.30 அன்று தேஜஸ் சதாரே (26) என்பவர் என மொத்தம் 7 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

இந்நிலையில், டிசம்பர் 31ஆம் திகதி பிரகாஷ் பார்கர் என்பவர் உயிரிழந்தார். இதனால் சிலிண்டர் வெடிப்பில் பலியான ஐயப்பப் பக்தர்களின் எண்ணிக்கை மொத்தம் 8 ஆக அதிகரித்துள்ளது.

முன்னதாக, பலியான ஐயப்பப் பக்தர்களின் குடும்பங்களுக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா ரூ.5 லட்சம் இழப்பீடு அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Mithu

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே
error: Content is protected !!