இலங்கை

பங்களாதேஷ் முன்னாள் பிரதமருக்கு மரண தண்டனை: என்.பி.பி. அரசு கூறுவது என்ன?

சட்டம் தனக்குரிய கடமையை சரிவர செய்யுமென உறுதியாக நம்புகின்றோம் என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்றது.

இதன்போது பங்களாதேஷில் இடம்பெற்ற மக்கள் போராட்டத்தின்போது இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் மக்கள் போராட்டம் நடந்த காலப்பகுதியில் பல்வேறு உறுதிமொழிகள் வழங்கப்பட்டன.

ஊழல்வாதிகள் தண்டிக்கப்படுவார்கள் என்றெல்லாம் கூறப்பட்டது. இது விடயத்தில் தாமதம் ஏன் என்று அமைச்சரிடம் வினவப்பட்டது.

இதற்கு பதிலளித்த அவர்,

“ சில சம்பவங்கள் தொடர்பான விசாரணைகள் நிறைவடைந்து, சட்டமா அதிபர் திணைக்களம் ஊடாக வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. அடுத்தக்கட்டம் பற்றி நீதிமன்றத்தான் தீர்ப்பு வழங்கும்.” என்றார்.

(Visited 4 times, 4 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!